இம்ரான் கான் நாளை வீடு திரும்புகிறார்
பாகிஸ்தானில் தெஹ்ரிக் - இ - இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் பூரண குணமடைந்துவிட்டதை அடுத்து, நாளை அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானில் தெஹ்ரிக் - இ - இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் பூரண குணமடைந்துவிட்டதை அடுத்து, நாளை அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானில் நடந்து முடிந்த தேர்தலுக்கு முன்பு, கூட்டத்தில் பங்கேற்க வந்த இம்ரான் கான், விபத்தில் சிக்கி காயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதன் காரணமாக, தற்போது பூரண குணமடைந்துவிட்டதாகவும், அவர் நாளை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பலாம் என்றும் அவரது கட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.