இன்போசிஸ் தலைவராக நாராயணமூர்த்தி மீண்டும் பொறுப்பேற்பு
இன்போசிஸ் நிறுவனத்தின் செயற் தலைவராக நாராயணமூர்த்தி மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று முதல் அவர் செயற்குழுத் தலைவராக பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் செயற் தலைவராக நாராயணமூர்த்தி மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று முதல் அவர் செயற்குழுத் தலைவராக பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1981ஆம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தைத் துவக்கிய நாராயணமூர்த்தி, 2011ஆம் ஆண்டு வரை தலைவராகப் பதவி வகித்து ஓய்வு பெற்றார்.
தற்போது இந்நிறுவனத்தின் தலைவராக இருந்த கமலர்நாத் பதவி விலகியதை அடுத்து தற்போது மீண்டும் நாராயணமூர்த்தி தலைவராக பதவியேற்றுள்ளார். இவருக்கு உதவியாக மகன் ரோஹன் மூர்த்தி செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement