முகப்பு
தற்போதைய செய்திகள்

காவிரி நதிநீர் பங்கீடு : ஜூன் மாதத்துக்கு 10 டிஎம்சி தண்ணீர் கோரும் தமிழகம்

காவிரி நதிநீர் பங்கீடு குறித்து முடிவெடுக்க புது தில்லியில் இன்று கூடிய தற்காலிக காவிரி கண்காணிப்புக் குழுவில் தமிழக, கர்நாடக அதிகாரிகள் தங்களது வாதங்களை முன் வைத்தனர்.

Updated On : 1 ஜூன் 2013, 1:00 pm IST
பகிர்:

காவிரி நதிநீர் பங்கீடு குறித்து முடிவெடுக்க புது தில்லியில் இன்று கூடிய தற்காலிக காவிரி கண்காணிப்புக் குழுவில் தமிழக, கர்நாடக அதிகாரிகள் தங்களது வாதங்களை முன் வைத்தனர்.

கூட்டத்தில் பங்கேற்ற தமிழக தலைமைச் செயலாளர், தமிழகத்துக்கு காவிரியில் இருந்து ஜூன் மாதத் தேவைக்கு 10 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆனால் இதற்கு மறுப்புத் தெரிவித்த கர்நாடக தலைமைச் செயலாளர், கர்நாடகத்தில் இன்னும் பருவ மழை துவங்கவேயில்லை. அதில்லாமல், கர்நாடகத்தில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு இது குறித்து கலந்தாலோசனை நடத்தி, முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். இன்னும் புதிய அரசு பணிகளைத் துவங்கவில்லை. எனவே காவிரியில் தற்போதைக்கு தண்ணீர் திறந்து விட இயலாது என்று கூறினார்.

Advertisement

Advertisement

இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட தற்காலிகக் கண்காணிப்புக் குழுவின் தலைவரும், மத்திய நீர்வளத் துறை செயலாளருமான எஸ்.கே. சர்க்கார், எடுக்க வேண்டிய முடிவு குறித்து ஆலோசித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.