சிறையில் மிகக் கடினமான வேலை கேட்கிறார் சஞ்சய் தத்
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத் தனக்கு கடினமான வேலைகளைத் தருமாறு கேட்டுள்ளார்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:11 PM
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத் தனக்கு கடினமான வேலைகளைத் தருமாறு கேட்டுள்ளார்.
இரவில் நிம்மதியாக தூங்க வேண்டும் என்பதால், சிறையில் மிகக் கடினமான பணிகளைத் தனக்கு ஒதுக்கித் தருமாறு சிறை நிர்வாக அதிகாரிகளிடம் சஞ்சய் தத் கோரிக்கை வைத்துள்ளார்.
ஏர்வாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சய் தத்துக்கு பாதுகாப்பு காரணங்கள் கருதி இதுவரை எந்த பணியும் ஒதுக்கப்படவில்லை என்று சிறைத் துறை அறிவித்துள்ளது.
Advertisement