சூதாட்டப் புகார் : அங்கீத் சவான் ஜாமீனில் விடுதலை
ஐபிஎல் சூதாட்டப் புகாரில் சிக்கி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் வீரர் அங்கீத் சவான், இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தார்.
ஐபிஎல் சூதாட்டப் புகாரில் சிக்கி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் வீரர் அங்கீத் சவான், இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தார்.
ஜூன் 2ம் தேதி, அங்கீத் சவானுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதைக் காரணம் கூறி, அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, அங்கீத் சவானுக்கு ஜூன் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதையடுத்து, திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அங்கீத் சவான், நேற்று இரவு சிறையில் இருந்து வெளியே வந்தார். இவருக்கு ஜூன் 2ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement