ஜூன் 2ல் பிசிசிஐ செயற்குழுவின் அவசரக் கூட்டம்
இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழுவின் அவசரக் கூட்டம் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:11 PM
இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழுவின் அவசரக் கூட்டம் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கிரிக்கெட் சூதாட்ட விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த பிசிசிஐ செயற்குழுக் கூட்டம் ஜூன் 8ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன் பதவி விலக வேண்டும் என்ற நெருக்குதல் அதிகரித்திருக்கும் நிலையில், பிசிசிஐ பொருளாளர் மற்றும் செயலாளர் நேற்று பதவி விலகியதை அடுத்து செயற்குழுக் கூட்டத்தை ஞாயிற்றுக் கிழமையே கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement