முகப்பு
தற்போதைய செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு சுடப்பட்ட பெண்

உத்தரப் பிரதேச மாநிலம் பிரோஸாபாத் அருகே ஒரு பெண்ணை பலாத்காரம் செய்த கும்பல், அவளையும், அவளது உறவினரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளது.

Updated On : 11 ஜூன் 2013, 2:18 pm IST
பகிர்:

உத்தரப் பிரதேச மாநிலம் பிரோஸாபாத் அருகே ஒரு பெண்ணை பலாத்காரம் செய்த கும்பல், அவளையும், அவளது உறவினரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளது.

துப்பாக்கிக் குண்டு காயத்துடன் மிக மோசமான நிலையில் மருத்துவமனையில்  இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பிரோஸாபாத்தில் நக்லா சிதாலி பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் தனது உறவினருடன் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது வாகனத்தை மறித்த ஒரு கும்பல், அப்பெண்ணை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது. அப்போது அதனை தடுக்க முயன்ற உறவினரை துப்பாக்கியால் சுட்ட அந்த கும்பல், பலாத்காரம் செய்துவிட்டு, அந்த பெண்ணையும் சுட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

காயமடைந்த இருவரும் ஆக்ராவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.