ஜூன் 20-ல் மீண்டும் தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம்!
கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் மீண்டும் தில்லியில் போராட்டம் நடத்துவது குறித்து...
தில்லியில், 2 ஆவது முறையாக போராட்டம் நடத்துவதாக கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் அறிவித்துள்ளனர்.
நாட்டின் மிகப் பெரிய இயக்கங்களில் ஒன்றாக உருவாகியுள்ள கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ தேர்வு முறைக்கேடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில், லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்ட நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கடந்த ஜூன் 6 அன்று முதல் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்த இயக்கத்தினர் தில்லி, புணே, ஜெய்ப்பூர், நாக்பூர், அமிர்தசரஸ், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் நடத்திய போராட்டங்களில் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், லடாக்கைச் சேர்ந்த ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்ளிட்டோர் பங்கேற்று ஆதரவளித்தனர்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி வரும் ஜூன் 20 ஆம் தேதி மீண்டும் தில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தவுள்ளதாக, அந்த இயக்கத்தின் நிறுவனர் அபிஜீத் தீப்கே அறிவித்துள்ளார்.