என்னை கொலை செய்ய சதி: இம்ரான் கான்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பேரணியொன்றில் என்னை கொல்லச் சதி நடைபெறுவதாக அரசு தரப்பு என்னை எச்சரித்தது என்றார். எனினும், அந்தச் சதியின் பின்னணியில் யார் இருந்தனர் என்பதை அவர்
தேர்தல் பிரசாரத்தின்போது என்னை கொலை செய்ய சதி நடப்பதாக அரசு எனக்கு எச்சரிக்கை விடுத்தது என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பேரணியொன்றில் என்னை கொல்லச் சதி நடைபெறுவதாக அரசு தரப்பு என்னை எச்சரித்தது என்றார். எனினும், அந்தச் சதியின் பின்னணியில் யார் இருந்தனர் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.முன்னதாக கட்சியன் பேரணியொன்றில் மேடைக்குச் செல்லும் வழியில் தவறி விழுந்த இம்ரான் கான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முழுமையாக குணமடையாததால், எம்.பி.யாக அவர் இன்னமும் பதவியேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement