ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்த ஷ்ரேயாஸ் ஐயர்!
ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் 3000 ரன்களைக் கடந்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் 3000 ரன்களைக் கடந்துள்ளார்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று (ஜூன் 17) லக்னௌவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி 403 ரன்கள் என்ற இமாலய இலக்கை ஆப்கானிஸ்தானுக்கு நிர்ணயிக்க, அந்த அணி 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் சதம் விளாசி அசத்தினர். ஷுப்மன் கில் 154 ரன்களும், இஷான் கிஷன் 125 ரன்களும் எடுத்தனர்.
Advertisement
Advertisement
3000 ரன்களைக் கடந்த ஷ்ரேயாஸ் ஐயர்!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் 26 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அவர் 3000 ரன்களைக் கடந்துள்ளார்.
இதுவரை இந்திய அணிக்காக 78 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் 3015 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 23 அரைசதங்கள் மற்றும் 5 சதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 128 ஆக உள்ளது.
நேற்றையப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (ஜூன் 20) சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெறுகிறது.