காங்கிரஸ் தலைவர் வி.சி. சுக்லா காலமானார்
சட்டீஸ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி.சி. சுக்லா இன்று காலமானார்.
சட்டீஸ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி.சி. சுக்லா இன்று காலமானார்.
கடந்த மாதம் சட்டீஸ்கரில், காங்கிரஸ் தலைவர்களை குறி வைத்து நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில், காங்கிரஸ் மூத்த தலைவர் வி.சி. சுக்லாவின் வயிற்றில் 3 துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, மிகவும் கவலைக்கிடமான நிலையில், கார்கோனில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் சுக்லா. தீவிர சிகிச்சை பெற்று வந்த சுக்லா, இன்று மதியம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Advertisement
Advertisement
84 வயதாகும் வித்ய சரண் சுக்லா, காங்கிரஸ் கட்சியின் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்டவர். மக்களவைக்கு போட்டியிட்டு 9 முறை தேர்வு செய்யப்பட்ட சுக்லா, 1957ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, மிக இளம் வயதில் நாடாளுமன்ற உறுப்பினரானவர் என்ற பெருமையைப் பெற்றார்.
இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அவரது அமைச்சரவையில் சுக்லா இடம்பெற்றிருந்தார். மேலும், அவரது வாழ்நாளில், தொலைத்தொடர்பு, உள்துறை, பாதுகாப்பு, நிதி, திட்டக்குழு, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறைகளின் அமைச்சராகவும் பணியாற்றியவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.