கார் கண்ணாடியை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை
சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையைச் சேர்ந்தவர் சிவலிங்க பிரசாத் (60). தொழில் அதிபரான இவர் இன்று காலை அசோக் நகருக்கு காரில் சென்றார். அங்கு முதலாவது அவென்யூவில் உள்ள ஆந்திரா வங்கியில் ரூ.10
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM
சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையைச் சேர்ந்தவர் சிவலிங்க பிரசாத் (60). தொழில் அதிபரான இவர் இன்று காலை அசோக் நகருக்கு காரில் சென்றார். அங்கு முதலாவது அவென்யூவில் உள்ள ஆந்திரா வங்கியில் ரூ.10 லட்சம் பணம் எடுத்துக் கொண்டு 9-வது அவென்யூவில் உள்ள சரவண பவன் ஓட்டலுக்கு சென்று காரிலேயே பணத்தை வைத்து விட்டு சாப்பிட சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது காரின் இடது பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் குமரன் நகர் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.