சங்ககிரி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் கர்நாடகா அரசு பேருந்து நடந்துனர் சாவு
பெங்களூரிலிருந்து கோவை நோக்கி சென்ற கர்நாடகா அரசு பேருந்து சங்ககிரி அருகே உள்ள மங்கரங்கம்பாளையம் என்ற இடத்தில் செல்லும் போது எதிர்பாரதவிதமாக அங்கு நின்று கொண்டிருந்த
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே நின்று கொண்டிருந்த டேங்கர் லாரியின் பின்புறம் கர்நாடகா அரசு பேருந்து இன்று அதிகாலை மோதியதில் நடத்துனர் உயிரழந்தார்.
பெங்களூரிலிருந்து கோவை நோக்கி சென்ற கர்நாடகா அரசு பேருந்து சங்ககிரி அருகே உள்ள மங்கரங்கம்பாளையம் என்ற இடத்தில் செல்லும் போது எதிர்பாரதவிதமாக அங்கு நின்று கொண்டிருந்த டேங்கர் லாரியின் பின்புறம் மோதியதில் பெங்களூர் அருகே உள்ள ஆவல்ஹல்லி, வினோபாகாலனி பகுதியைச் சேர்ந்த பேருந்தின் நடத்துனர் மத்தன்னா(55) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெங்களூரைச் சேர்ந்த உல்லால் உப்நகர் அருகே உள்ள மாருதி நகர் பகுதியைச் சேர்ந்த மகாதேவ் பேருந்தை ஒட்டிச் சென்றுளார். பேருந்தில் மற்ற பயணிகளுக்கு காயம் ஏதுவுமின்றி உயிர் தப்பினர்.
இது குறித்து சங்ககிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.