முகப்பு
தற்போதைய செய்திகள்

சத்தியமங்கலம் வனப்பகுதியில் குளங்கள் வெட்ட திட்டம்

வன உயிரினங்கள் ஏராளமாக வசிக்கும் சத்தியமங்கலம் வனப்பகுதியில், குளங்களை வெட்டகவும், மூங்கில், புற்கள் போன்றவற்றை அதிகளவில் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Updated On : 11 ஜூன் 2013, 12:55 pm IST
பகிர்:

வன உயிரினங்கள் ஏராளமாக வசிக்கும் சத்தியமங்கலம் வனப்பகுதியில், குளங்களை வெட்டகவும், மூங்கில், புற்கள் போன்றவற்றை அதிகளவில் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து வனத்துறை அதிகாரி கூறியதாவது, கோடை காலங்களில் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை மற்றும் உணவு பற்றாக்குறை காரணமாக வனப்பகுதியை விட்டு கிராமங்களை நோக்கி வன விலங்குகள் படையெடுக்கின்றன.

இதனை தடுக்கும் வகையில், வனப்பகுதியில் குளங்களை வெட்டி மழை நீரை அதிகளவில் சேமிக்கவும், ஆங்காங்கே மூங்கில் மற்றும் புற்களை நட்டு வளர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், கோடை காலத்திலும், வன விலங்குகளுக்குத் தேவையான உணவு பற்றாக்குறை இல்லாமல் கிடைக்கும். இதற்கான ஆய்வறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உரிய நிதி கிடைக்கப்பெற்றதும் பணிகள் துவங்கும் என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.