நீக்கப்பட்ட ஊழியர்கள் மீது தடியடி : நீதி விசாரணை கோருகிறது அதிமுக
புதுச்சேரி பொதுப்பணித் துறையில் பணியாற்றி நீக்கப்பட்டவர்கள் மீது நேற்று போலீஸ் தடியடி நடத்தியது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி பொதுப்பணித் துறையில் பணியாற்றி நீக்கப்பட்டவர்கள் மீது நேற்று போலீஸ் தடியடி நடத்தியது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.
பொதுப்பணித் துறையில் பணியாற்றிய 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை தற்போதைய ரங்கசாமி தலைமையிலான அரசு பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, தாங்களாகவே பணிக்குச் செல்லும் போராட்டத்தை ஊழியர்கள் நடத்தினர். அப்போது அவர்களை கலைக்க போலீஸ் தடியடி நடத்தப்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
Advertisement
Advertisement
இது குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று புதுச்சேரி அதிமுக வலியுறுத்தியுள்ளது.