முகப்பு
தற்போதைய செய்திகள்

மகள் காதலனை மணந்ததால் பெற்றோர் விஷம் குடித்தனர்:தந்தை சாவு

இதில் சிகை அலங்காரம் படித்துவந்த சுஸ்மிதாவும், ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்தனர். இவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

Updated On : 11 ஜூன், 2013 at 2:21 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM

கூடுவாஞ்சேரியை அடுத்த ஊரப்பாக்கத்தில் வசித்து வந்தவர் ஆனந்தன் (45). டெய்லர். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு சுஸ்மிதா (18), பிருந்தா (14) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

இதில் சிகை அலங்காரம் படித்துவந்த சுஸ்மிதாவும், ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்தனர். இவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சுஸ்மிதா பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனை ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதனை அறிந்த சுஸ்மிதா பெற்றோர் மனம் உடைந்து  நேற்று தற்கொலை செய்யும் முடிவில் பூச்சி மருந்து குடித்தனர். வீட்டில் மயங்கி கிடந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆனந்தன் உயிரிழந்தார். சுமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.