மும்பை கட்டட விபத்து : பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
மும்பையில் மாஹிம் பகுதி கட்டட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM
மும்பையில் மாஹிம் பகுதி கட்டட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை மாஹிம் பகுதியில் இருந்த 4 மாடிக் கட்டடம், கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 5 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர்.
காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் இருவர் பலியானதைத் தொடர்ந்து பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், கட்டட இடிபாடுகளுக்குள் சிலர் சிக்கியிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.