சோகமான அத்வானியின் புகைப்படம் அடங்கிய பேனர்கள் அகற்றம்
பாஜக தலைவர் அத்வானி சோகமாக இருப்பதாகவும், பாஜக இரண்டாக பிரிந்துவிட்டதாகவும் அச்சிடப்பட்டு வைக்கப்பட்ட பேனர்கள் இன்று அகற்றப்பட்டன.
பாஜக தலைவர் அத்வானி சோகமாக இருப்பதாகவும், பாஜக இரண்டாக பிரிந்துவிட்டதாகவும் அச்சிடப்பட்டு வைக்கப்பட்ட பேனர்கள் இன்று அகற்றப்பட்டன.
பாஜகவில் இருந்து அத்வானி விலகுவதாகக் கூறி ராஜினாமாக் கடிதம் கொடுத்ததை அடுத்து, அவர் சோகமாக இருப்பது போலவும், பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரை பூ இரண்டாகப் பிரிந்து விட்டதாகவும் சில பேனர்கள் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், அவற்றை மாநகராட்சி நிர்வாகம் இன்று அகற்றியுள்ளது. அத்வானியும், தனது ராஜினாமா முடிவை திரும்பப் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement