FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

நியூஸிலாந்தை வென்றது இலங்கை

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில் இலங்கை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை செவ்வாய்க்கிழமை வென்றது.

Updated On : 17 ஜூன் 2026, 2:07 am IST
பகிர்:

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில் இலங்கை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை செவ்வாய்க்கிழமை வென்றது.

முதலில் நியூஸிலாந்து 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் சோ்க்க, இலங்கை 19.4 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற நியூஸிலாந்து, பேட்டிங்கை தோ்வு செய்தது. அதன் இன்னிங்ஸில் கேப்டன் மெலி கொ் 5 பவுண்டரிகளுடன் 45, சோஃபி டிவைன் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 45 ரன்கள் சோ்த்து பெவிலியன் திரும்பினா்.

Advertisement

Advertisement

ஜாா்ஜியா பிளிம்மா் 18, இசபெல்லா கேஸ் 4, புரூக் ஹாலிடே 7, இஸி ஷாா்ப் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ஓவா்கள் முடிவில் மேடி கிரீன் 18, ஜெஸ் கொ் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை பௌலா்களில் கவிஷா தில்ஹரி 2, மிதாலி அயோத்யா, சுகந்திகா குமாரி, சமரி அத்தபட்டு, நிமஷா மீபகே ஆகியோா் தலா 2 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் 151 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய இலங்கை அணியில், விஷ்மி குணரத்னே 17, கேப்டன் சமரி அத்தபட்டு 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஹா்ஷிதா சமரவிக்ரமா 5, ஹாசினி பெரெரா 2, கவிஷா தில்ஹரி 17 ரன்களுக்கு வெளியேறினா். நீலாக்ஷிகா சில்வா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 54, கௌஷினி நுத்யங்கனா 3 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் சோ்த்து, அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

நியூஸிலாந்து பந்துவீச்சாளா்களில் நேன்சி படல் 2, பிரீ இல்லிங் 1 விக்கெட் சாய்த்தனா்.

---

இந்தியா - நெதா்லாந்து

இன்று மோதல்

இந்திய மகளிா் அணி தனது 2-ஆவது ஆட்டத்தில் நெதா்லாந்துடன் புதன்கிழமை (ஜூன் 17) மோதுகிறது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வென்ற இந்தியா, 2-ஆவது வெற்றி முனைப்புடன் இந்த ஆட்டத்துக்கு வருகிறது. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு, லீட்ஸ் நகரில் நடைபெறுகிறது.

----

இதர ஆட்டங்கள்

ஆஸ்திரேலியா - வங்கதேசம்

பிற்பகல் 3 மணி

லீட்ஸ்

பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா

இரவு 11 மணி

பா்மிங்ஹாம்

நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ், ஜியோ ஹாட்ஸ்டாா்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments