உத்தர்கண்டில் 14 ஆயிரம் பேர் மீட்பு : 60,000 பேர் தவிப்பு
உத்தர்கண்டில் வெள்ளத்தில் சிக்கி பல்வேறு இடங்களில் சிக்கித் தவித்த 14 ஆயிரம் பேரை பல்வேறு மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
உத்தர்கண்டில் வெள்ளத்தில் சிக்கி பல்வேறு இடங்களில் சிக்கித் தவித்த 14 ஆயிரம் பேரை பல்வேறு மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
எனினும், இன்னும் பல இடங்களில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல், பசியோடு பரிதவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதில் குறிப்பாக கேதார்நாத் கோயிலுக்கு அருகே மீட்புப் படையினர் நுழைய முடியாத பல இடங்களில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். சில இடங்களில் ராணுவ ஹெலிகாப்டர்கள் தரையிறங்கக் கூட இடமில்லாமல், வானத்தில் பறந்தபடியே பொதுமக்களை ஹெலிகாப்டர்களுக்குள் ஏற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும், ஹெலிகாப்டர்களுக்குள் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 10 பேரை மட்டுமே ஏற்ற முடியும் என்பதால், ஆயிரக்கணக்கானோரை மீட்க பல மணி நேரங்கள் ஆகின்றன.
Advertisement
சில இடங்களில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கயிறுகள் கட்டப்பட்டு அதன் வழியாக ஒவ்வொருவராக கரையேறும் நிலை உள்ளது.