முகப்பு
தற்போதைய செய்திகள்

இஷ்ரத் வழக்கு : குற்றப்பத்திரிக்கையில் புலனாய்வு அதிகாரியின் பெயர் இல்லை

இஷ்ரத் போலி என்கவுண்டர் வழக்கில், புலனாய்வுத் துறை அதிகாரி ராஜேந்திர குமாரின் பெயரை முதல் குற்றப்பத்திரிக்கையில் சிபிஐ சேர்க்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 1 ஜூலை 2013, 3:24 pm IST
பகிர்:

இஷ்ரத் போலி என்கவுண்டர் வழக்கில், புலனாய்வுத் துறை அதிகாரி ராஜேந்திர குமாரின் பெயரை முதல் குற்றப்பத்திரிக்கையில் சிபிஐ சேர்க்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஷ்ரத் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்து வரும் 4ம் தேதி குஜராத் உயர் நீதிமன்றத்தில் முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.

இந்த சம்பவத்தில் ராஜேந்திர குமாரின் தொடர்பு பற்றி சிபிஐ மேலும் விசாரணை நடத்த உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இன்னும் ஒரு சில வாரங்களில் அவர் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.