முகப்பு
தற்போதைய செய்திகள்

உத்தர்கண்டில் இலவச ரேஷன், வட்டிச் சலுகை : விஜய் பகுகுணா

உத்தர்கண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச ரேஷன், மின்சார கட்டணத்தில் இருந்து விலக்கு என பல்வேறு சலுகைகளை மாநில முதல்வர் விஜய் பகுகுணா அறிவித்துள்ளார்.

Updated On : 1 ஜூலை 2013, 3:02 pm IST
பகிர்:

உத்தர்கண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச ரேஷன், மின்சார கட்டணத்தில் இருந்து விலக்கு என பல்வேறு சலுகைகளை மாநில முதல்வர் விஜய் பகுகுணா அறிவித்துள்ளார்.

இன்று டேஹ்ராடூனில், மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுடன் இணைந்து, மாநில மறுகட்டமைப்பு, மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டார்.

அப்போது, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச ரேஷன் அளிக்கப்படும். மின்சார கட்டணத்தில் இருந்த விலக்கு, வங்கிகளில் வாங்கிய கடன்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் வட்டி விலக்கு அளிக்கப்படும் என்று கூறினார்.

Advertisement

Advertisement

உத்தர்கண்ட் மறுவாழ்வு மற்றும் மறு கட்டமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டு, அது, மாநிலத்தின் மறு நிர்மாணப் பணிகளை கவனிக்கும். நதிக்கரையோரங்களில் இனிமேல் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்படாது என்று கூறினார்.

உத்தர்கண்டில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது சொந்தக் காலில் நிற்க மாநில அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று கூறினார் விஜய் பகுகுணா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.