குன்னூர் நீதிமன்ற நீதிபதி ஜாமினில் விடுதலை
குன்னூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் தங்கராஜ்(29). இவர் மீது இவர் மீது திருப்பூர் மாவட்டம் பல்லடம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் உமாமகேஸ்வரி, தங்கராஜ் தன்னை
குன்னூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் தங்கராஜ்(29). இவர் மீது
இவர் மீது திருப்பூர் மாவட்டம் பல்லடம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் உமா மகேஸ்வரி, தங்கராஜ் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து நீதிபதி தங்கராஜை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் நீதிபதி தங்கராஜ் சார்பில் திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதி கணேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் நீதிபதி தங்கராஜூக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
Advertisement