தமிழக மீனவர்கள் 4 பேர் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு
கடந்த ஜுன் மாதம் 26-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் ஜாக்சன், ஐஸ்டின் உள்பட 4 பேர் சென்ற படகில் பழுது ஏற்பட்டதால் 4 பேரும் நடுக்கடலில் தத்தளித்து வந்தனர்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:14 PM
கடந்த ஜுன் மாதம் 26-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் ஜாக்சன், ஐஸ்டின் உள்பட 4 பேர் சென்ற படகில் பழுது ஏற்பட்டதால் 4 பேரும் நடுக்கடலில் தத்தளித்து வந்தனர். அவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டு இலங்கை முகாமில் தங்க வைத்தனர்.இந்நிலையில், அந்த 4 மீனவர்களையும் இன்று இலங்கை கடற்படை சர்வதேச எல்லையில் இந்திய கடற்படையிடம் ஒப்படைத்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் இன்று மாலை ராமேஸ்வரம் வர உள்ளனர்.