முகப்பு
தற்போதைய செய்திகள்

போலி ஆவணங்கள் மூலம் ரூ.1 1/2 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்தவர் கைது

இந்த நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்து விட்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த புகாரின்பேரில் மத்திய குற்றபிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் சிவகுமார் ஆகியோர்

Updated On : 1 ஜூலை 2013, 3:47 pm IST
பகிர்:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஐ.எஸ்.ஆர்.ஓ) விஞ்ஞானியாக பணிபுரிந்தவர் சேது நாராயணன். தற்போது இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் ரூ.1 1/2 கோடி மதிப்பிலான 3750 சதுர அடி நிலம் உள்ளது.

இந்த நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்து விட்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த புகாரின்பேரில் மத்திய குற்றபிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் சிவகுமார் ஆகியோர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் செல்வராஜ், இன்ஸ்பெக்டர் ஆல்ட்ரின் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது விஞ்ஞானி சேது நாராயணனுக்கு சொந்தமான நிலத்தை மரக்காணத்தை சேர்ந்த வேலாயுதம் என்பவர் போலி ஆவணம் தயாரித்து அபகரித்தது தெரியவந்தது.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.போலீஸார் இது குறித்து மேலும்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.