ஆந்திராவில் 160 பில்லியன் டாலர் முதலீடு செய்ய விரும்பும் சீனா
சீன அதிபர் ஜீ ஜிங்பிங்கின் பொருளாதார ஆலோசகரும், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினருமான சூசான் மா, ஆந்திரபிரதேச முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டியை சந்தித்து பேசினார். அப்போது உணவு, நடுத்தர
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:15 PM
ஆந்திர பிரதேசத்தில் பல்வேறு துறைகளில் 160 பில்லியன் டாலர் முதலீடு செய்வதற்கு சீனா தயாராக இருப்பதாக சீன அதிபரின் பொருளாதார ஆலோசகர் சூசான் மா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன அதிபர் ஜீ ஜிங்பிங்கின் பொருளாதார ஆலோசகரும், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினருமான சூசான் மா, ஆந்திரபிரதேச முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டியை சந்தித்து பேசினார். அப்போது உணவு, நடுத்தர தொழிற்துறைகள், உள்கட்டமைப்பு, கல்வித்துறை மற்றும் பல்வேறு துறைகளில் முதலீடு செய்வது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர் என்று முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.