குடிநீர் தொட்டிக்குள் தவறி விழுந்தவர் சாவு
ராயப்பேட்டை குடிசை மாற்று வாரிய பகுதியை சேர்ந்தவர் ரவி (40) பெயிண்டராக பணியாற்றும் இவர் இன்று காலை மெலடி தியேட்டர் அருகே பாரதி சாலையில் உள்ள காலி இடத்தில் நடந்து சென்றார்.அப்போது
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:15 PM
ராயப்பேட்டை குடிசை மாற்று வாரிய பகுதியை சேர்ந்தவர் ரவி (40) பெயிண்டராக பணியாற்றும் இவர் இன்று காலை மெலடி தியேட்டர் அருகே பாரதி சாலையில் உள்ள காலி இடத்தில் நடந்து சென்றார்.அப்போது அங்கிருந்த குடிநீர் தொட்டிக்குள் தவறி உள்ளே விழுந்து விட்டார். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் ரவி உயிரிழந்தார். அண்ணாசாலை இன்ஸ்பெக்டர் முருகேசன் விசாரணை நடத்தினார்.