ஏர்செல் - மேக்ஸிஸ் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ
ஏர்செல் - மேக்ஸிஸ் ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்தி வந்த சிபிஐ, தனது அறிக்கையை இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:16 PM
ஏர்செல் - மேக்ஸிஸ் ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்தி வந்த சிபிஐ, தனது அறிக்கையை இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்த விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பதாக வந்த புகார் குறித்து சிபிஐ கடந்த இரண்டு மாதங்களாக விசாரணை நடத்தி வந்தது.
இந்த நிலையில், இவ்வழக்கு விசாரணையில் சிபிஐ மெத்தனமாக செயல்படுவதாக நீதிபதிகள் குற்றம்சாட்டினர்.
Advertisement