முகப்பு
தற்போதைய செய்திகள்

மீன்சுருட்டி அருகே டிராக்டர் மோதி விவசாயி சாவு

மீன்சுருட்டி அருகே டிராக்டர் மோதியதில் விவசாயி உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம்,மீன்சுருட்டி அருகேயுள்ள  மேலகஞ்சன்கொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி குப்புசாமி(52) இவர் புதன்கிழமை தனது மோட்டார் சைக்கிளில் அணைக்கரைக்குச் சென்று

Updated On : 1 ஆகஸ்ட், 2013 at 10:17 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:16 PM

மீன்சுருட்டி அருகே டிராக்டர் மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.

 அரியலூர் மாவட்டம்,மீன்சுருட்டி அருகேயுள்ள  மேலகஞ்சன்கொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி குப்புசாமி(52) இவர் புதன்கிழமை தனது மோட்டார் சைக்கிளில் அணைக்கரைக்குச் சென்று கொண்டடிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த பிரபாகரன்(32) என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் குப்புசாமிó மீது மோதியது இதில் பலத்த காயமடைந்த குப்புசாமி கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.

 இது குறித்து குப்புசாமியின் உறவினர் செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸபெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து தலைமறைவான பிரபாகரனை தேடிவருகிறார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.