முகப்பு
தற்போதைய செய்திகள்

4வது ஒரு நாள் : இந்தியாவுக்கு 145 ரன்கள் இலக்கு

இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 4வது ஒரு நாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்கி 42.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 1 ஆகஸ்ட் 2013, 3:44 pm IST
பகிர்:

இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 4வது ஒரு நாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்கி 42.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது.

பூவா தலையா வென்ற இந்தியா, பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ஜிம்பாப்வே அணி வீரர்கள் களமிறங்கினர். அடுத்தடுத்து சொற்ப ரன்களிலேயே ஜிம்பாப்வே அணி வீரர்கள் ஆட்டமிழக்க, 42.4வது ஓவரில் ஜிம்பாப்வே 144 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஜிம்பாப்வே அணி சாரபில் சிகும்புரா மட்டுமே 66 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார். துவக்க வீரர் சிபன்டா 45 பந்துகளில் 24 ரன்களை எடுத்தார்.

Advertisement

Advertisement

இந்தியா தரப்பில் மிஷ்ரா 3 விக்கெட்டுகளையும், ஷர்மா, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, ஏற்கனவே நடைபெற்ற 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிவிட்டது.

இந்த நிலையில், 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு அடுத்து களமிறங்க உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.