முகப்பு
தற்போதைய செய்திகள்

இலங்கை கடற்படை தாக்குதல் : மத்திய அரசு மீது அதிமுக உறுப்பினர் குற்றச்சாட்டு

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவது குறித்த மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாநிலங்களவையில் இன்று பேசிய அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் குற்றம்சாட்டியுள்ளார்.

Updated On : 22 ஆகஸ்ட், 2013 at 5:10 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:19 PM

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவது குறித்த மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாநிலங்களவையில் இன்று பேசிய அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் நடவடிக்கையின்மையால் தான் இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். அத்துமீறி கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டும், தொடர்ந்து மீனவர்களின் சிறைக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.