தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா புதிய சாதனை!
தொடக்க ஆட்டக்காரராக அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.
தொடக்க ஆட்டக்காரராக அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் நேற்று (ஜூன் 13) நடைபெற்றது. போட்டி மழை காரணமாக 25 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா 16 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். நேற்றைய ஆட்டத்தில் 16 ரன்கள் எடுத்ததன் மூலம், சர்வதேசப் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக 16,000 ரன்கள் குவித்து அவர் சாதனைப் படைத்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுவரை இந்திய அணிக்காக ரோஹித் சர்மா 67 டெஸ்ட் போட்டிகளில் 4301 ரன்களும், 283 ஒருநாள் போட்டிகளில் 11593 ரன்களும், 159 டி20 போட்டிகளில் 4231 ரன்களும் எடுத்துள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த பிறகு சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த ரோஹித் சர்மா, அடுத்த ஆண்டே டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார். தற்போது இந்திய அணிக்காக அவர் ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.