சென்செக்ஸ் உயர்வான நிலையில் நிறைவு
பங்கு வர்த்தகம் தொடர்ந்து சரிவை அடைந்து வந்த நிலையில், வியாழக்கிழமை மாலை 407 புள்ளிகள் உயர்வுடன் சென்செக்ஸ் நிறைவு பெற்றது.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:18 PM
பங்கு வர்த்தகம் தொடர்ந்து சரிவை அடைந்து வந்த நிலையில், வியாழக்கிழமை மாலை 407 புள்ளிகள் உயர்வுடன் சென்செக்ஸ் நிறைவு பெற்றது.
சென்செக்ஸ் 407 புள்ளிகள் உயர்ந்து 18,312 என்ற நிலையிலும், நிப்டி 105 புள்ளிகள் உயர்ந்து 5,408 என்ற நிலையிலும் இருக்கும் போது வர்த்தகம் நிறைவு பெற்றது.
ரான் பாக்ஸி, ஹிண்டால்கோ, ரிலையன்ஸ் இன்ப்ரா, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தையும், டிஎல்எப், எச்டிஎப்சி, ஏசிசி, எம் அன்ட் எம் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டத்தையும் அடைந்தன.
Advertisement