முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னையில் அரசு பஸ் நடத்துநர் மாயம்

சென்னையில் அரசு பஸ் நடத்துநர் காணாமல்போனது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On : 22 ஆகஸ்ட், 2013 at 6:14 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:19 PM

சென்னையில் அரசு பஸ் நடத்துநர் காணாமல்போனது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே உள்ள மண்ணூர் பேட்டை முகப்பேர் சாலையில் வசித்தவர் ரா. மகன் சியாம்ராஜாசிங் (50). இவர் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் பெரம்பூர் பணிமனையில் நடத்துனராக வேலை செய்து வந்தார்.

Advertisement

இந்நிலையில் ராஜாசிங் கடந்த மாதம் 7ம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் அவர் மனைவி குளோரி தங்கம் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் அளித்தார்.

அப் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.