முகப்பு
உலகம்

லண்டனில் கத்திக் குத்து தாக்குதலில் இந்திய வம்சாவளி இளைஞர் படுகொலை

லண்டனில் 26 வயது இந்திய வம்சாவளி இளைஞர் கத்திக்குத்து தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 14 ஜூன் 2026, 3:19 pm IST
கோப்புப்படம்.
பகிர்:

லண்டனில் 26 வயது இந்திய வம்சாவளி இளைஞர் கத்திக்குத்து தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு லண்டனின் சவுத்தால் பகுதியில் உள்ள நார்த் சாலை மற்றும் டார்மர்ஸ் வெல்ஸ் லேன் சந்திப்பிற்கு அருகே கடைக்கு வெளியே புதன்கிழமை நள்ளிரவு நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் குர்பேஜ் சிங்(26) பலியானார். அவருடன் இருந்த 30 வயது மதிக்கத்தக்க மற்றொரு நபரும் காயமடைந்தார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். கத்திக் குத்துக் காயங்களுடன் இருந்த குர்பேஜ் சிங்கைக் காப்பாற்ற மருத்துவக் குழுவினர் முயன்றபோதிலும், அவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட ஏழு பேரை போலீஸார் கைது செய்தது. விசாரணையைத் தொடர்ந்து, அவர்களில் ஆறு பேர்விடுவிக்கப்பட்டனர். ஒருவர் மட்டும் பின்னர் ஒரு தேதியில் ஆஜராகும் நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தற்போது, பலியான குர்பேஜ் சிங்கின் குடும்பத்தினருக்கு சிறப்பு காவல் அதிகாரிகள் தேவையான ஆதரவையும் உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

summary

A 26-year-old Indian-origin man was murdered in a knife attack in Southall, west London, the Metropolitan Police said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.