தெலங்கானாவுக்கு எதிர்ப்பு : தெலுங்குதேசம் உறுப்பினர் ஹரிகிருஷ்ணா ராஜினாமா
தெலங்கானாவுக்க எதிர்ப்புத் தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஹரிகிருஷ்ணா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:18 PM
தெலங்கானாவுக்க எதிர்ப்புத் தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஹரிகிருஷ்ணா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அவரது ராஜினாமாவை, மாநிலங்களவை தலைவர் ஏற்றுக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தனி தெலங்கானா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ள ஹரி கிருஷ்ணா, ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி பேருந்து பயணம் மேற்கொள்ள உள்ளார். இவர் மறைந்த என்.டி.ஆரின் மகன் ஆவார்.
Advertisement