முகப்பு
தற்போதைய செய்திகள்

போலி வீடியோ போட்டவர் அமிதாபிடம் மன்னிப்பு கேட்டார்

மோடியை பற்றி அமிதாப் புகழும் வகையில் போலியான வீடியோவை போட்ட குஜராத் இசை அமைப்பாளர் உத்பல் ஜீவ்ரஜனி மன்னிப்புக் கோரியுள்ளார்.

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 4:02 pm IST
பகிர்:

மோடியை பற்றி அமிதாப் புகழும் வகையில் போலியான வீடியோவை போட்ட குஜராத் இசை அமைப்பாளர் உத்பல் ஜீவ்ரஜனி மன்னிப்புக் கோரியுள்ளார்.

குஜராத் முதல்வர் மோடிசை அடுத்த பிரதமர் என்ற அளவுக்கு ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சம் புகழ்வது போல போலியான ஒரு வீடியோ இணயைதளத்தில் அப்டேட் செய்யப்பட்டிருந்தது.

இதனைப் பார்த்த அமிதாப் கடும் அதிருப்தி அடைந்தார். அந்தபோலி வீடியோவை பதிவு செய்தவர் அமிதாப்பிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மோடியும் கூறியிருந்தார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், உத்பல் ஜீவ்ரஜனி தான் ஒரு குஜராத் திரைப்பட இசையமைப்பாளர் என்றும், தான் தனது தவறுக்கு மன்னிப்புக் கேட்பதாகவும், அந்த போலி வீடியோ இணையத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.