முகப்பு
தற்போதைய செய்திகள்

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி : சிதம்பரம் விளக்கம்

சர்வதேச பொருளாதார நிலையே, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக்குக் காரணம் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Updated On : 22 ஆகஸ்ட், 2013 at 5:29 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:19 PM

சர்வதேச பொருளாதார நிலையே, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக்குக் காரணம் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை அடைந்து வரும் நிலையில், இது குறித்து இன்று நிதியமைச்சர் ப. சிதம்பரம் விளக்கம் அளித்தார்.

அப்போது, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவதைத் தடுக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சந்தையில் பண மதிப்பு என்பது நிலையற்றதாகவே இருக்கும். ஆனால், அதற்காக மத்திய அரசு முதலீட்டு திட்டங்களை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது.

Advertisement

இந்தியாவில் தற்போது நிலக்கரி சுரங்கங்கள் பலவும் பணிகளைத் துவக்காமல் உள்ளன. மேலும், இரும்பு தாது சுரங்கங்களும் பணிகளை முழு வீச்சில் நடத்தினால், நிச்சயம் பொருளாதாரம் வளர்ச்சி நிலையை அடையும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.