ஸ்பென்சர் பிளாசா வளாகத்தில் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு
ஸ்பென்சர் பிளாசா வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு இளைஞர் ஒருவர் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:18 PM
ஸ்பென்சர் பிளாசா வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு இளைஞர் ஒருவர் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் அமைந்துள்ள ஸ்பென்சர் பிளாசா வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வாகனம் ஒன்று புதன்கிழமை இரவு தீப்பிடித்து எரிந்தது. இது, எண்ணூரைச் சேர்ந்த மதிபாலாஜி என்பவரது வாகனமாகும்.
அப்பகுதியில் இந்த கேமராவின் உதவியோடு, இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், மதிபாலாஜியின் நண்பர் ரகுமான் என்பவரே, கருத்து வேறுபாடு காரணமாக மோட்டார் சைக்கிள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தது தெரிய வந்துள்ளது.
Advertisement