முகப்பு
தற்போதைய செய்திகள்

சட்டத்தில் காலத்துக்கேற்ற மாற்றம் தேவை : கபில் சிபல்

சமூக, பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப சட்டத்திலும் மாற்றம் செய்யப்பட வேண்டும். அப்படி செய்தால் தான் சிறப்பான பலனை பெற முடியும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

Updated On : 2 செப்டம்பர் 2013, 10:44 am IST
பகிர்:

சமூக, பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப சட்டத்திலும் மாற்றம் செய்யப்பட வேண்டும். அப்படி செய்தால் தான் சிறப்பான பலனை பெற முடியும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள தேசிய சட்டப் பள்ளி மற்றும் இந்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய கபில் சிபல், சட்டத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது மோசமான தீர்ப்புக்கே வழி வகுக்கும். அனைத்து சட்டமும் ஒரு மனிதனைப் போன்றது. இதயம் இல்லாத மனிதனாகவே சட்டம் உள்ளது.

Advertisement

Advertisement

சமூக அமைப்பு, சமுதாயம் என நிரந்தரமில்லாமல் மாறிக் கொண்டே இருப்பது போல, காலத்துக்கு ஏற்ப சட்டத்தையும் மாற்றிக் கொண்டே வந்தால்தான் அதன் பலனை முழுமையாக அனுபவிக்க முடியும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments