தகவல் அறியும் உரிமைச் சட்ட திருத்த மசோதா இன்று தாக்கல்
அரசியல் கட்சிகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்ட வருவது குறித்த சட்ட திருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
அரசியல் கட்சிகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கும் சட்ட திருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
இன்று தாக்கல் செய்யப்படும் திருத்தப்பட்ட மசோதா நாடாளுமன்றத்தில் ஒப்புதலை பெற்றுவிட்டால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் எந்த ஒரு அரசியல் கட்சியிடமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மக்கள் தரப்பில் இருந்து விளக்கம் கேட்க முடியாது.