பெட்ரோல் பங்குகள் இரவில் மூடல் திட்டம் : பாஜக கடும் தாக்கு
பெட்ரோல் பங்குகளை இரவில் மூடும் மத்திய அரசின் திட்டத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:19 PM
பெட்ரோல் பங்குகளை இரவில் மூடும் மத்திய அரசின் திட்டத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய பாஜக பேச்சாளர் ஷானவாஸ் ஹுசேன், பெட்ரோல் பம்ப் என்ன? மத்திய அரசு நாட்டையே மூடி விட திட்டமிட்டுள்ளது. பொதுமக்கள் காலை நேரத்தில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் போட்டுக் கொள்வது என்பது மிகவும் சிரமமான விஷயம். இது பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி எடுத்துள்ள மிகவும் கண்டிக்கத்தக்க முடிவு என்று கூறியுள்ளார்.