ஜாமீனை நீட்டிக்கக் கோரி சவுதாலா தாக்கல் செய்த மனு தள்ளுபடி
ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீனை நீட்டிக்கக் கோரி ஹரியானா முன்னாள் முதல்வர் ஓ.பி. சவுதாலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீனை நீட்டிக்கக் கோரி ஹரியானா முன்னாள் முதல்வர் ஓ.பி. சவுதாலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆசிரியர் நியமன முறைகேட்டு வழக்கு தொடர்பாக செப்டம்பர் 17ம் தேதிக்குள் திகார் சிறையில் சவுதாலா ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
தனது உடல் நிலையைக் காரணம் காட்டி, ஜாமீனை நீட்டிக்க சவுதாலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், எச்.எல். தத்து மற்றும் எஸ்.ஜே. முகோபாத்யாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Advertisement
மேலும், செப்டம்பர் 17ம் தேதி முதல் செப்டம்பர் 23ம் தேதிக்குள் சவுதாலா சரணடைய வேண்டும் என்று கால நீட்டிப்பு செய்துள்ளனர்.