முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழக மீனவர்கள் விவகாரம் : மத்திய அரசுக்கு நோட்டீஸ்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பதில் அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Updated On : 11 செப்டம்பர், 2013 at 2:56 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:20 PM

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பதில் அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் பாதுகாப்பு நலச் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரியும், கச்சத் தீவு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தக் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக மீனவர்கள் விவகாரத்தில் 4 வாரங்களுக்குள் பதிலளிக்கவும், கச்சத் தீவு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தவும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.