முகப்பு
தற்போதைய செய்திகள்

தில்லி மாணவி பாலியல் வழக்கு: வெள்ளிக்கிழமை தீர்ப்பு

தில்லி மருத்துவ மாணவி பாலியல் வழக்கு விவாதம் இன்று காலை முதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன் தீர்ப்பு இன்று அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீர்ப்பு வரும் வெள்ளிக்கிழமை (செப்.13) மதியம் 2.30க்கு வழங்கப்படும் என்று தெரிகிறது.

Updated On : 11 செப்டம்பர் 2013, 2:43 pm IST
பகிர்:

தில்லி மருத்துவ மாணவி பாலியல் வழக்கு விவாதம் இன்று காலை முதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன் தீர்ப்பு இன்று அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீர்ப்பு வரும் வெள்ளிக்கிழமை (செப்.13) மதியம் 2.30க்கு வழங்கப்படும் என்று தெரிகிறது.

கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வந்த சாகேத் விரைவு நீதிமன்றத்தில் இன்று, குற்றம்சாட்டப்பட்ட முகேஷ் சிங், அக்சய் தாகுர், வினய் சர்மா, பவன் குப்தா ஆகிய 4 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று செவ்வாயன்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், இன்று தண்டனை குறித்து இறுதி விசாரணை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதையடுத்து தீர்ப்பினை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார் நீதிபதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments