ஸோபியானில் ஊரடங்கு தளர்வு
ஜம்மு காஷ்மீர் மாநிலம், தெற்கு காஷ்மீர் பகுதியில் உள்ள ஸோபியான் மாவட்டத்தில் புதன்கிழமையான இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், தெற்கு காஷ்மீர் பகுதியில் உள்ள ஸோபியான் மாவட்டத்தில் புதன்கிழமையான இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை அப்பகுதியில் நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்ததை அடுத்து பதற்றம் ஏற்படாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் முகாம் மீது நடந்த தாக்குதலை அடுத்து மோதல் உருவானது. இதைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் 4 பேர் பலியாயினர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வன்முறை ஆர்ப்பாட்டம் வெடித்ததை அடுத்து அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Advertisement
Advertisement