பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு விசா வழங்க இந்தியா மறுப்பு
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்தியா வர இருந்த பாகிஸ்தானை சேர்ந்த அணிக்கு விசா வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்தியா வர இருந்த பாகிஸ்தானை சேர்ந்த அணிக்கு விசா வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
சுமார் 10 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 21ம் தேதி துவங்குகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தானைச் சேர்ந்த பைசலாபாத்தின் வோல்வ்ஸ் அணி பங்கேற்க இருந்தது.
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இரு நாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி, பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு விசா வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
Advertisement
எனவே, சாம்பியன்ஸ் லீக் போட்டியின் தகுதி சுற்றுக்கு வேறொரு அணி அழைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.