முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸோபியான் உள்ளிட்ட மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸோபியானில், பாதுகாப்புப் படையினர் நேற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து பதற்றமான சூழ்நிலையை தடுக்க குல்காம், புல்வாமா, ஸோபியான் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Updated On : 12 செப்டம்பர் 2013, 11:18 am IST
பகிர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸோபியானில், பாதுகாப்புப் படையினர் நேற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து பதற்றமான சூழ்நிலையை தடுக்க குல்காம், புல்வாமா, ஸோபியான் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸோபியானில் கடந்த வாரம் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்து நேற்று போராட்டம் நடத்தியவர்களைக் கலைக்க மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்படாமல் தவிர்க்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.