முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆத்தூரில் பள்ளி மாணவன் மாயம்

ஆத்தூரில் பத்தாம் வகுப்பு மாணவனை காணவில்லை என அவனது தந்தை காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 6:39 pm IST
பகிர்:

ஆத்தூரில் பத்தாம் வகுப்பு மாணவனை காணவில்லை என அவனது தந்தை காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

ஆத்தூர் மெயின்ரோடு பகுதியில் வசிக்கும் வாசு மகன் விக்னேஷ்(15). விக்னேஷ் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 20ம் தேதி மாலை 5 மணிக்கு பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்த மாணவன் விக்னேஷ் ஸ்கூல் பேக்கை வைத்துவிட்டு தன் தங்கை வினிதாவை பள்ளியிலிருந்து கூட்டி வருவதாகக் கூறிச் சென்றுள்ளான்.

வீட்டிலிருந்து வெளியே சென்ற விக்னேஷ் வெகுநேரமாகியும் திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் அவனைத்தேடி உள்ளனர். அவனை கண்டுபிடிக்க முடியாததால் அவனது தந்தை வாசு ஆத்தூர் காவல்நிலையத்தில் இன்று புகார் செய்தார். ஆத்தூர் உதவி ஆய்வாளர் சங்கரேஸ்வரி வழக்குப்பதிவு செய்தார். திருச்செந்தூர் கோவில் காவல்நிலைய ஆய்வாளர் பிரதாபன் காணாமல் போன மாணவன் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement

Advertisement

ஆத்தூரில் பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படடுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments