பராசக்தி சம்பள பாக்கி! வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா!
இயக்குநர் சுதா கொங்கரா டான் பிக்சர்ஸுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்...
இயக்குநர் சுதா கொங்கரா பராசக்தி திரைப்படத்தின் சம்பள பாக்கி தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சுதா கொங்கரா - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான பராசக்தி திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியானது.
ஹிந்தி மொழித் திணிப்பின்போது தமிழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் எழுச்சியைப் பேசும் படமாக திரைக்கு வந்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதனால், நன்றாக எடுக்கப்பட்டிருக்க வேண்டிய கதையை வீணடித்துவிட்டதாகவும் கருத்துகள் பதிவாகின. இப்படத்தைத் தயாரித்த டான் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது இதயம் முரளி, தனுஷ் - 56 ஆகிய படங்களைத் தயாரிக்கின்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பராசக்தி திரைப்படத்தை இயக்கியதற்கான சம்பளத்தில் பாக்கி ரூ. 8.39 கோடியைத் தயாரிப்பு நிறுவனம் வழங்காததால் இயக்குநர் சுதா கொங்கரா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், டான் பிக்சர்ஸ் தயாரித்த இதயம் முரளி படத்தை வெளியிடத் தடை விதிக்கவும் கோரியுள்ளார். சுதா கொங்கராவின் வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 8 ஆம் தேதிக்குள் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
Director Sudha Kongara has filed a case in the High Court regarding outstanding remuneration for the film Parasakthi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.